Tuesday, March 28, 2006

பேரம்

தீபாவளி சமயத்தில்
பக்கத்து வீட்டுக்காரியிடம் கடன் வாங்கிய
தங்க வளை டாலர் செயின் சகிதமாக
மற்றவர்களின் கவனம் கவர
செருப்பை 'டப் டப்' என்று அடித்துக் கொண்டே
புடவை எடுக்க நுழைந்தாள் ஒருத்தி.
கடையைத் தலைகீழாகப் புரட்டியும்
திருப்தி அடையாமல்
அங்கும் இங்கும் நோக்க
இன்னொருத்தி எடுத்து வைத்த புடவை
பிடித்துப் போக
அவளும் அதே டிசைனில் எடுத்துவிட்டு
ரூ.300 மதிப்புள்ள சேலைக்கு
500 ரூபாய்த் தாளைப்
பெருமையுடன் நீட்டிவிட்டு வெளியே வந்தவள்
5 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு முழம் பூவை
ரூ.4.50 க்கு பூக்காரியிடம் பேரம் பேசினாள்
நாம் அன்றாடம் காணும்
ஒரு நடுத்தர குடும்பத்தலைவி.

0 Comments:

Post a Comment

<< Home