ஆடாத ஆட்டமெல்லாம்...
மகளிர் தினத்தன்று எழுதினேன்.அம்மா,தங்கை பற்றிய கவிதைகளை மயில் (ம) SK அனுப்பியதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று எழுதியது.
*********************************************
பெண் என்றாலே எனக்கு ஏதோ ஒரு வெறுப்பு;
ராமுவைக் கன்னக்குழியில் விழவைத்த மாதவி--
சோமுவைக் கூந்தலில் பின்னிக் கொண்ட சுந்தரி--
பக்கத்து வீட்டு வாத்தியாரை
முந்தானையில் முடிந்து கொண்ட அவர் மனைவி--
…..ம்….இன்னதென்று காரணம் சொல்லத் தெரியவில்லை.
கல்லூரி விடுதியில் தினம் ஒரு 'தம்'
வேலை கிடைத்தவுடன் வார இறுதியில் ஒரு 'பெக்'
பொழுது போக்க என் நண்பர்கள்
போதாக்குறைக்கு தினம் காலை 'ஜிம்'
ப்ச்… ’bachelor life’ மாதிரி வருமா..??
'மௌனம் பேசியதே' சூர்யாவின்
ஜெராக்ஸ் காப்பியாக நான் உருவானதில்
பொறுக்க முடியாத அம்மா
எனக்கு ஒரு கால்கட்டு போட நினைத்து
அத்தை மகளைப் பெண் பார்க்க அழைத்தாள்.
முடிவை முன்பே அறிந்ததால்
நண்பர்களும் நமுட்டுச் சிரிப்புடன் கூட வந்தனர்.
அவள் எதிரில் வந்து நின்றவுடன்
நிமிர்ந்து நோக்கிய அக்கணத்தில்
இதயம் ஒரு துடிப்பை இழக்க
கவிழ்ந்துகொண்டே சம்மதமாகத் தலையசைத்தேன்;
நண்பர்கள் பேய் அறைந்தது போல் உட்கார்ந்திருக்க
மனசாட்சி என் எதிரில் நின்று சிரிப்பாய் சிரித்தது.
**************************************************

0 Comments:
Post a Comment
<< Home