பணி ஓய்வு
அந்தக் காலத்து 10-ம் வகுப்பு என் அம்மா...
ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியையாய் இருந்து
பணி ஓய்வு பெற்றாள் அன்று.
அலுவலக நண்பர்கள்--
தூரம் (ம) நெருங்கிய சொந்தங்கள்--
அக்கம் பக்கத்து வீட்டார்கள்--
என்று ஒரு படையே வந்ததால்
வீடு அல்லோலகல்லோலப்பட்டது.
அத்துணை மனிதருக்கும்
காபி போடுவதில் ஆரம்பித்து
இரவு டிபன் வரை
தனி ஆளாக நின்று
தடபுடலாக இல்லாவிடினும்
வந்தவர்கள் வயிறு நிரம்பும் அளவிற்கு
சிட்டாகப் பறந்து வேலை செய்து வழியனுப்பிவிட்டு
'அப்பாடா....!' என்ற பெருமூச்சுடன்
சோபாவில் சாய்ந்தாள்....
வீட்டு வேலைகளுக்கு --
என்றுமே 'பணி ஓய்வு' பெற முடியாத குடும்பத் தலைவி.

0 Comments:
Post a Comment
<< Home