CITயில் ஒரு நாள்
சனிக்கிழமை அதிகாலை 8 மணிக்கே குளித்துவிட்டு
நண்பனின் T-சர்ட்டுக்குள் என்னைப் புகுத்திவிட்டு
அழுக்கானால் தான் அழகாகும் ஜீன்ஸையும் அணிந்து
பக்கத்து அறையின் பொது Dஎஒவையும் அடித்து
விடிந்தாலும் விழிக்காத 'மருதமலை'யை விட்டு
அரக்கப் பரக்க ஓடிச் சென்று
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி
போன் பூத் முன் காத்திருந்த
காதலியின் முன்பு நின்ற போது
நொடிப்பொழுதில்
'சொத்'தென்று என் நெற்றியில் விழுந்து
கண்ணாடியில் வழிந்து நின்றது ஒன்று.
'க்ளுக்' என்று சிரித்தவளைச் சட்டை செய்யாது
யாராவது பார்த்துவிட்டார்களா என்று
சுற்றும் முற்றும் பார்த்தேன்...
காக்கைகளின் பரிகாசக் கரைகளைக் கவனியாமல்.
(சும்மா ஒரு கற்பனை தான்...)
***********************************************

0 Comments:
Post a Comment
<< Home