காதலர் தினப் பரிசு
காதலர் தினத்தன்று நான் எழுதியது....
***************************************
அடம் பிடித்த அம்மாவை சம்மதிக்க வைத்து
கிண்டல் செய்த தங்கைக்கு முறுவலித்து
ஒரு மாதிரியாகப் பார்த்த அக்காளிடம் அசடு வழிந்து
முறைத்துக் கொண்ட சொந்தங்களைச் சமாதானப்படுத்தி
என்னைப் புரிந்து கொண்ட அப்பாவை மனதில் வாழ்த்தி
நமக்கு விசேடமான காதலர் தினத்தில்
உன்னைப் பெண் பார்க்க வருகையிலே
'தனியாகப் பேச வேண்டும்' என்றாய்.
வீட்டுக்குத் தெரியாமல் காதல் புரிந்த
வசந்த கால உரையாடல்கள் நினைவிலாட
பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று
தனியறையில் நுழைந்தேன்.
கெஞ்சிக் கேட்ட போதெல்லாம்
என்னை ஏமாற்றிய நீ
காதலர் தினப் பரிசாக
'கடனாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி
'நச்'சென்று கன்னத்தில் முத்திவிட்டு
வெட்கம் பொங்க ஓடிச் சென்றாய்.
வட்டியோடு முதலும் சேர்த்து எத்தனை என்று
கணக்குப் பார்த்து விக்கித்து நின்றேன் நான்,செய்வதறியாது!!
********************************************************

0 Comments:
Post a Comment
<< Home