வெள்ளிக்கிழமை
--------------------------------
அலுவலகமே களை கட்டும்--
நவநாகரிக யுவதிகள்
ஜீன்ஸில் ஒயிலாக நடைபயிலும்--
குலவிளக்கெல்லாம் குத்துவிளக்காகும்—
வெள்ளிக்கிழமையில்
கலிகாலத்தின் கொடுமையென நினைத்து
நான் மட்டும் நல்ல பிள்ளையாக
புவிபார்த்த விழியாக நடக்கையில்
மல்லி மணம் பரப்பி
சரசரக்கும் புடவையில்
சட்டென்று என்னைக் கடந்துசென்றாள்
என்னவள்.
ஒரு கணம் திரும்பிப் பார்த்து
நின்று கொண்டேயிருந்தேன்
என் கற்பைத் தொலைத்து விட்டு.
---------------------------------

0 Comments:
Post a Comment
<< Home