Tuesday, March 28, 2006

தாவணி கனவுகள்

நாகரிகத்தின் கால்தடங்கள்
என் கிராமத்தில் பதியாத காலம்--
11-ம் வகுப்பு கோடை விடுமுறை
பம்பரம் விடுவதிலும் கிணற்றுக் குளியலிலும்
பஞ்சு மிட்டாய் போல் கரைந்த நேரம்.
ஆதவன் சாயும் அந்திப் பொழுதில்
குளக்கரையோரம் இயற்கையை ரசித்தபடி
நடந்து கொண்டிருந்தேன்...
இள மஞ்சள் தாவணிக்குப் பொருத்தமாக
கறுப்பு கலர் ரவிக்கையுடன்
இடை தொடும் கருநிறக் கூந்தல் காற்றிலாட
என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு
BSA SLR-ஐ மிதித்துக் கொண்டே சென்றாள்
என் அத்தை மகள்.
அவள் சைக்கிள் ஓட்டிய அழகில்
வாயுதேவனும் மதிமயங்க
அவளது தாவணி பின் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டது.
ஓடிச் சென்று அதை விடுவித்தவுடன்
நாணத்தால் முகம் சிவக்க
வேகமாக உருட்டிக்கொண்டே பறந்துவிட்டாள்.

ம்ம்...அவளுக்குத் தெரியவா போகிறது.?!
தாவணியுடன் சேர்த்து
என் இதயமும் சிக்கிக் கொண்ட சங்கதி.

0 Comments:

Post a Comment

<< Home