Tuesday, March 28, 2006

நான் ஒரு குழந்தை

கழுகுமலை முருகன் கோயிலில்
பெரியவர்கள் பரபரப்பாக வேலை செய்ய
குழந்தைகள் அங்கும் இங்கும் ஓட
சிரிப்பும் கும்மாளமுமாக
ஊர் கூடி வாழ்த்த வந்திருந்தது
என் அக்காள் திருமணத்திற்கு.

பட்டு வேட்டி சட்டையுடன்
மாலையைத் தூக்கிக்கொண்டு நான் செல்கையில்
அங்கே ஒரு 20 வயது குழந்தை
6 வயது குழந்தைக்கு 'முத்த மழை' பொழிந்தது.

எதற்கு முத்தம் கொடுத்தாள் என்று நான் கேட்க
'சொல்ல மாட்டேன் போ….' என்று
முரண்டு பிடித்தது குழந்தை.
கையில் இரண்டு மிட்டாய் வைத்தவுடன்
உண்மை துலங்கியது எனக்கு...
'நீங்க புடவையில ரொம்ப அழகா இருக்கீங்க'
என்று குழந்தை அவளிடம் சொல்லியதாம்...!

என் மனம் குறுகுறுக்க ஆரம்பித்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே நடக்கையில்
அவள் கைகளையே 'வடம்' என்று பிடித்து
குழந்தைகள் தங்கத் தேரை இழுத்து வந்தனர்.
நான் வழிமறித்து , குழந்தைகளை விரட்டினேன்.
என்ன வேண்டும் என்பது போல் என்னை நோக்கினாள்.
'உங்க பேர் தேவதையா..??' என்று நான் கேட்டவுடன்
மறைந்திருந்த வெட்கம் வெளிப்பட்டு
ஓடோடிச் சென்று மீண்டும் முத்தமழை பொழிந்தாள்
அதே குழந்தைக்கு....
ஏக்கப்பெருமூச்சுடன் அன்று நான் ஆசைப்பட்டேன்
குழந்தையாக மாற வேண்டும் என்று.

0 Comments:

Post a Comment

<< Home