Wednesday, July 12, 2006

ஐயகோ...!!

ஆங்காங்கே அழுகுரலும்
மரண வலியின் ஓலமும்
சிதறிய உடல்களும்
உறைந்து போன செம்புனலும்
மயிரிழையில் உயிர் பிழைத்த
பதட்டமான முகங்களும்
குண்டு வெடிப்பின் தீவிரத்தை உணர்த்த…
அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி
காரியம் கைகூடிய மகிழ்ச்சியில்
எங்கோ கொக்கரித்துக் கொள்ளும்
ஈரமில்லா நெஞ்சம் கொண்டவர்களே!!!
த்தூ..!! நீங்கள் வெறும் காட்டுமிராண்டிக் கோழைகள்.