Tuesday, April 18, 2006

பார்வை

சொந்த பந்தமெல்லாம் குழுமியிருக்க
பெயர் சூட்டு விழா நடந்தது.
முப்பாட்டனின் மூக்கு இருந்ததால்
அவர் பெயரை வேண்டினார் ஒருவர்.
சிரிப்பழகு பாட்டியைப் போல் இருந்ததால்
பாட்டி பெயர் வேண்டினாள் பெற்றெடுத்தவள்.
பொறுக்க முடியாத அவள் மாமியார் சொன்னார்
'அப்பனை உரிச்சு பொறந்துருக்கான்'.
சிணுங்க ஆரம்பித்து
அழத் தொடங்கியது குழந்தை.

குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஒருத்தியின்
கொஞ்சம் வெளியே தெரியும் தனம்--
தாய்மையின் அழகு ஒருவனுக்கு;
இன்னொருவனுக்கு அது விரசம்...ம்ம்
பார்வை எப்படியெல்லாம் வித்தியாசப்படுகிறது...??

ஆளாளுக்கு அவரவர் விருப்பம் சொல்ல
குழந்தையைக் காண ஓடோடி வந்து
அதைக் கையில் எடுத்த தகப்பன்
முகம் வெளிறிப் போய் நின்றான்..
திருமணம் முன் காதலித்து
ஏமாற்றியவளின் முகச்சாடையைக் கண்டு.
கேலி செய்வது போல்
குழந்தை சிரித்தது இப்போது.

0 Comments:

Post a Comment

<< Home