Tuesday, May 09, 2006

இலக்கணம்

அக்காளின் சுடிதார் அணிந்து
அம்மாவிடம் 'ஸ்பெஷல் க்ளாஸ்' பொய்யோடு
யாருக்கும் தெரியாமல்
முகத்தைத் துப்பட்டாவால் மறைத்துக்கொண்டே
பசை கொண்டு 'பச்சக்' என்று ஒட்டினாற்போல்
ஒருவன் பின் பைக்கில் அமர்ந்து
ECRல் 'விர்'ரென்று மகாபலிபுரம் பறக்கும்
ஒரு நவநாகரிக இளைஞி
மறந்தே போகிறாள்….
துப்பட்டாவோடு கூடவே
பெண்மையின் நாற்பண்புகள் காற்றில் பறப்பதை.

0 Comments:

Post a Comment

<< Home